search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை கொன்ற கணவன்"

    • ஸரியாவை கடைசியாக கண்டது ஜேரியஸ்தான் என தெரிய வந்தது
    • அக்கறையுள்ள கணவன் போல் எங்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக ஸரியாவை தேடினான்

    அமெரிக்காவின் வடக்கில் உள்ளது அலாஸ்கா மாநிலம்.

    இங்கு வசித்து வரும் 21-வயதான ஜேரியஸ் ஹில்டாபிராண்ட், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஸரியா ஹில்டாபிராண்ட் (21). ஸரியா அலாஸ்கா தேசிய பாதுகாப்புப்படையில் காவலராக தேர்ச்சியடைந்தவர். இவர் ப்ரெட் அண்ட் ப்ரூ அலாஸ்கா எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

    இத்தம்பதிகள் சமீபத்தில்தான் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வீடு மிட்டவுன் பகுதியில் மாக்கிங் பர்ட் டிரைவ் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 6-ம் தேதியிலிருந்து ஸரியா திடீரென காணாமல் போனார்.

    பதட்டமடைந்த இவர் கணவர் ஜேரியஸ் பல இடங்களில் அவரை தேடினார். பிறகு காணாமல் போன மனைவியை குறித்து தகவல் பெற முகநூலில், மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடிவந்தார்.

    இவருடன் ஸரியாவின் உறவினர்களும், நண்பர்களும் அவரை குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்காங்கே மக்களிடையே ஸரியாவின் புகைப்பட அடையாளங்களை வெளியிட்டு இது சம்பந்தமான துண்டு பிரசுரங்களையும் கொடுத்து தேடிவந்தனர்.

    இந்நிலையில் ஸரியாவின் உடல் ஒரு மழைநீர் கால்வாயில் காணப்பட்டது. உடனே தகவல் தரப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

    வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு நடந்து சென்ற ஸரியாவை கடைசியாக பார்த்தது ஜேரியஸ்தான் என புலன் விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஜேரியஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.

    காவல்துறையினரின் விசாரணையில் இறுதியில் ஜேரியஸ் தன் மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டார். மனைவியை சுட்டு கொன்றதாகவும், அவர் உடலை யாருக்கும் தெரியாமல் மழைநீர் காலவாயில் பதுக்கியதாகவும்,

    பிறகு மனைவி காணாமல் போனதாக நாடகமாடி அனைவரின் உதவியுடன் தேடி வந்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார் ஜேரியஸ்.

    சுமார் ரூ.4 கோடி ($5,00,000) பிணையில் வெளியே வரும் வகையில் அவர் மீது ஆன்கரேஜ் காவல்துறை மனைவியை கொலை செய்தது மற்றும் தடயங்களை மறைத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

    "அவளை அவனே கொன்றுவிட்டு ஒரு அக்கறையுள்ள கணவன்போல் எங்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக ஸரியாவை தேடினான். எனக்கு எதையும் நம்ப முடியவில்லை"என இச்சம்பவம் குறித்து ஸரியாவின் தாயார் மெரிடித் பார்னே கூறியிருக்கிறார்.

    இதுவரை கொலைக்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    • பூஜாவின் தாய் ஷீலா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரேலி:

    உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பதே கஞ்ச் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சந்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபால் லோதி (வயது 40). இவர் கடந்த 2012-ல் பூஜா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ணா பால் கடந்த மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கினார். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

    தனது வீட்டுக்கு சென்ற அவரிடம், அவரது மனைவி முன்பு போல பாசம் காட்டவில்லை. இதனால் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரின் மைனர் குழந்தைகள் முன்னிலையில் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்தார்.

    இதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா பால் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு மனைவியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா வீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி சென்று பூஜாவை ஓட, ஓட சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

    இதனை தடுக்க வந்த மனைவியின் தோழி முன்னா (30) என்பவர் மீதும் தோட்டா பாய்ந்தது. அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    போலீசார் கிருஷ்ண பாலை கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது மனைவி தன்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவரை சுட்டுக்கொலை செய்தேன் அவள் இறக்க தகுதியானவள். அவளைக் கொன்றதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

    இது குறித்து பூஜாவின் தாய் ஷீலா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நாட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×